News November 25, 2024
தமிழகத்தை மூன்றாக பிரிக்க வலியுறுத்தல்

தமிழகத்தை 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என மூன்றாக பிரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதிகளை தனியாக பிரிக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். இந்த கருத்தை திராவிட மற்றும் தமிழ் தேசியக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Similar News
News October 29, 2025
அரசியலில் குதிக்கிறாரா MS தோனி?

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணையமைச்சர் ரக்ஷா கட்சே, தோனியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள MSD-ன் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, விளையாட்டில் உளவியல் ரீதியான பயிற்சிக்கான மேம்பாடு & விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.
News October 29, 2025
அக்டோபர் 29: வரலாற்றில் இன்று

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.
News October 29, 2025
காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு

டிரம்ப் மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம், தற்போது மீறப்பட்டுள்ளது. இஸ்ரேல் PM நெதன்யாகு, காஸாவில் உடனடியாக கடும் தாக்குதலை நடத்துமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது மீண்டும் அப்பாவி காஸா மக்கள் மீதான கொடூரத்திற்கு வித்திடும் என உலக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.


