News June 24, 2024

நீட் மறுதேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை

image

நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறுதேர்வில் பங்கேற்காதது ஏன்? என்று கேள்வி எழுந்தது. இதையடுத்து, மறுதேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்க உள்ளது.

Similar News

News November 17, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள CM ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, போலீஸ் தலைமை இயக்குநர் இ-மெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் CM வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

News November 17, 2025

தவெக புயலில் திமுக காணாமல் போய்விடும்: அருண்ராஜ்

image

விஜய் ஒரு அட்டை தாஜ்மஹால் என உதயநிதி விமர்சித்ததற்கு தவெக அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால்தான் உதயநிதிக்கு எந்த தகுதியுமே இல்லாமல் MLA சீட் கிடைத்தது என்றும் இப்படி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது எனவும் கூறியுள்ளார். மேலும், திமுக சீட்டுக்கட்டால் ஆன கோட்டை என்ற அவர், தவெக மாதிரியான பெரிய புயலில் அந்த கட்சி காணாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

தோனிக்கும் KL ராகுலுக்கும் இடையே உள்ள ஸ்பெஷல்

image

தோனி என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும், KL ராகுலுக்கு கூடுதல் ஸ்பெஷல் போல. ஏனென்றால், தோனியிடம் இருந்து மட்டுமே தனது அனைத்து சர்வதேச போட்டிகளுக்கான cap-ஐயும் தான் பெற்றுள்ளதாக ராகுல் கூறியுள்ளார். இதுவே ஒரு தனித்துவம் தான் என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார். SA-க்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடியதன் மூலம், தோனி, கம்பீர், ரோஹித் வரிசையில் 4,000 டெஸ்ட் ரன்கள் கிளப்பில் ராகுல் இணைந்துள்ளார்.

error: Content is protected !!