News February 11, 2025
IITகளில் மீண்டும் அநீதி: மதுரை எம்பி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739257122805_1173-normal-WIFI.webp)
IITகளில் முனைவர் படிப்பில் 560 OBC, SC, ST மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் MP குற்றஞ்சாட்டியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை துறை வாரியாக வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கேட்டதாகவும், அதற்கு மத்திய அமைச்சர் மழுப்பலாக பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ள அவர், அமைச்சர் தந்த அரைகுறை விவரங்களைக் கொண்டே 590 இடங்கள் பறிபோனது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
Similar News
News February 11, 2025
க்ரிப்டோ கரன்சி விற்கத் தொடங்கிய த்ரிஷா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739278687615_1246-normal-WIFI.webp)
நடிகை த்ரிஷாவின் X தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார். பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கும் அவர், அதனை சரி செய்யும் வரை போஸ்ட் செய்வது தான் அல்ல என்றும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.
News February 11, 2025
விஜய்க்கு 20% வாக்குகள் உள்ளதா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738410234721_1246-normal-WIFI.webp)
<<15429075>>தவெக தலைவர் விஜய்யை சந்தித்த பிரசாந்த் கிஷோர்<<>>, அவருக்கு 15% முதல் 20% வாக்குகள் கிடைக்கலாம் என்று சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருபுறம், புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யால் 5% வாக்குகளைக் கூட பெற முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். இதில் எது உண்மையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பலத்தை நிரூபிப்பாரா விஜய்?
News February 11, 2025
காங்கோவில் கொடூரம்: 55 பேர் படுகொலை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739277299504_347-normal-WIFI.webp)
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (DR Congo) நேற்று அப்பாவி மக்கள் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் வடகிழக்கு பகுதியில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. இதில் CODECO என்ற குழு, ட்ஜைபா கிராமங்களுக்குள் புகுந்து தாக்கியதில் 55 பேர் பலியாகியுள்ளனர். எரிக்கப்பட்டுள்ள வீடுகளில் இன்னும் பிணங்கள் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.