News March 25, 2025
மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 15, 2025
கரூர் துயரம்: ஸ்டாலின் பேரவையில் விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார். உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளதாகவும் CM தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து விவாதிக்க EPS கோரிக்கை வைத்த நிலையில், ஸ்டாலின் பேசி வருகிறார்.
News October 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது.. செக் பண்ணுங்க

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 26-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் ₹1,000 வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
News October 15, 2025
கோவா Ex.முதல்வர் காலமானார் .. PM மோடி இரங்கல்!

கோவாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரவி நாயக்(79) மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சி சார்பில் கோவா CM-ஆக 1991 & 1994-ல் இவர் பதவி வகித்துள்ளார். 2022-ல் பாஜகவில் இணைந்த ரவி நாய்க், தற்போதைய பாஜக அரசில் வேளாண்துறை அமைச்சராக இருந்தார். 7 முறை MLA-வாகவும், 1998-ல் MP-யாகவும் வெற்றி பெற்ற இவரின் மறைவுக்கு PM மோடி, கோவா CM என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.