News March 25, 2025
மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 21, 2025
ஜடேஜாவை CSK விட்டது ஆச்சரியமாக உள்ளது: கும்ளே

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.
News November 21, 2025
NATIONAL 360°: வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலி

*உ.பி., பள்ளி ஒன்றில் கேஸ் லீக்கின் காரணமாக 16 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். *டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். *திரிபுராவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலியாகினர். *மும்பையில் காற்றுமாசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


