News March 25, 2025

மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

image

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 15, 2025

BREAKING: இன்று முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 18 வயது நிறைவடையும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவர்களது உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப்களும் வழங்கப்படவுள்ளன.

News September 15, 2025

கழுத்து, முதுகுவலி நீங்க இந்த யோகாசனத்தை பண்ணுங்க!

image

கழுத்து, முதுகு வலி நீங்க பாசிமோட்டானாசனம் பண்ணுங்க.
☆தரையில் அமர்ந்து, கால்களை முன்னோக்கி நீட்டவும்.
☆கைகளை மேல்நோக்கி உயர்த்தி, குனிந்து கைகளால் பாதங்களைப் பிடிக்க முயற்சிக்கவும்.
☆முடிந்தவரை தலை, கால்களுக்கு அருகில் வரும்படி குனியவும். ஆனால் முதுகெலும்பை நேராக இருக்க வேண்டும்.
☆இந்தநிலையில், 15- 20 விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.

News September 15, 2025

எப்போதும் சரணடைய மாட்டோம்: UK PM ஸ்டார்மர்

image

குடியேற்றத்தை கண்டித்து லண்டனில் நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதை கண்டித்த அந்நாட்டு PM கெய்ர் ஸ்டார்மர், தேசிய கொடியை கேடயமாக பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடும் வலதுசாரிகளிடம் UK ஒருபோதும் சரணடையாது என தெரிவித்தார். மேலும், UK எப்போதும் பன்முகத்தன்மையை வலியுறுத்துவதாகவும், மக்களின் நிறத்தை வைத்து அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!