News October 9, 2025
விஜய்யின் உயிர் நண்பன் சஞ்சீவ் சொன்ன தகவல்

விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அவரிடம் கரூர் விவகாரம் தொடர்பான கேள்விகள் வைக்கப்பட்டது. அப்போது, சம்பவ இடத்தில் இல்லை என்பதால் தனக்கு அதை பற்றி பேச போதுமான அறிவு கிடையாது என அவர் சொன்னார். ஆனால், விஜய்க்கு எந்த பயமும் இல்லை எனவும், சரியான நேரம் வரும்போது களத்துக்கு அவர் செல்வார் எனவும் சஞ்சீவ் பதிலளித்தார்.
Similar News
News October 9, 2025
ரோஹித், கோலி மரியாதையாக நடத்தப்பட வேண்டும்: அஸ்வின்

ரோஹித் மற்றும் கோலி விஷயத்தில் BCCI அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இருவரும் 2 சகாப்தங்களாக அணிக்காக விளையாடிய சீனியர்கள் எனவும், அவர்கள் அணியில் நீடிக்க தகுதியுடையவர்கள் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும், கேப்டன் பொறுப்பில் ரோஹித் இருக்க வேண்டியவர் எனவும், இருப்பினும் 2027 WC-ஐ கவனத்தில் கொண்டு BCCI எடுத்த முடிவில் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
திமுகவில் இணைந்தார்.. மீண்டும் வெடித்தது சர்ச்சை

விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சுரேந்திரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த மாதம், கரூர் நகர காங்., நிர்வாகி கவிதாவை செந்தில்பாலாஜி திமுகவில் இணைத்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் CM ஸ்டாலின் வரை சென்ற நிலையில், காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், திமுக MLA சீனிவாசன், சுரேந்திரனை இணைத்தது சர்ச்சையாகியுள்ளது.
News October 9, 2025
இஸ்ரேலுக்கு செல்கிறார் டிரம்ப்

அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், அவர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த 2016-க்கு பிறகு, அக்.12-ல் இஸ்ரேலுக்கு செல்கிறார் டிரம்ப். உலகமே எதிர்பார்த்த ஒரு விஷயத்தை, தான் முடித்துகாட்டியதாக அவர் பெருமிதம் கொண்டுள்ளார். இந்த சந்திப்பில், பணயக்கைதிகள் விடுவிப்பு குறித்தும், இஸ்ரேலின் படைகள் பின்வாங்குவது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.