News May 2, 2024
இணையவழி சூதாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கத் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க விரும்புவோர் www.tnonlinegamingauthority.com இணையத்தளம், tnoga@tn.gov.in மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
திருச்சி ரயில் ரத்து: ரயில்வே அறிவிப்பு

திருப்பூர் அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி – பாலக்காடு ரயிலானது (வண்டி எண்: 16843) வரும் 30 மற்றும் பிப்.1 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
‘அரசுக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை’

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
News January 29, 2026
காங்., அடுக்கிய டிமாண்ட்.. இவ்வளவும் வேண்டுமா?

கனிமொழி – ராகுல் சந்திப்பில் காங்., பல டிமாண்ட்களை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, 39 தொகுதிகள், து.சபாநாயகர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 5 வாரிய தலைவர்கள் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் வேண்டும் என காங்., கோரிக்கை வைத்துள்ளதாம். அத்துடன், ஒருவேளை தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் ‘ஆட்சியில் பங்கு’ தரவேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.


