News September 15, 2024
அனுபவம் இல்லா நிர்வாகிகள்.. தாங்குவாரா விஜய்?

தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், கையோடு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். தற்போது வரை அவர் கட்சியில் மாநாடு நடத்திய அனுபவம் கொண்ட யாரும் இல்லை. அனைவரும் அனுபவம் இல்லாத நிர்வாகிகள்தான். இதனால், வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை அவர் தனி ஆளாக தாங்குவாரா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உங்கள் அபிப்ராயத்தை கீழே பதிவிடுங்கள்.
Similar News
News September 15, 2025
மூளையை தின்னும் அமீபா: 18 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று வேகமெடுத்துள்ளது. இதுவரை 18 உயிரிழந்துள்ளதாகவும், 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாசுபட்ட நீர்நிலைகளில், குளிக்கவோ, முகம் கழுவவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்திலிருந்து 17 வயது சிறுவனுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை குளோரினைட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 15, 2025
இட்லிக்கு ஏங்கினாரா தனுஷ்? உண்மை என்ன?

இட்லி சாப்பிடுவதே சிறுவயதில் தனக்கு பெருங்கனவு என்று <<17712349>>தனுஷ் கூறியிருந்தார்<<>>. ஆனால், ஒரு இயக்குநரின் மகனுக்கு இந்த நிலையா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கான பதில், சென்னை வந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, மில்லில் வேலை பார்த்துள்ளார். அப்போது, ₹1-ஐ மிச்சப்படுத்த தினமும் 7 கி.மீ., நடந்து போயுள்ளார். விசுவிடம் கஸ்தூரி உதவி இயக்குநராக இருந்தபோதும் சிறிய வீட்டிலேயே இருந்தனராம்.
News September 15, 2025
₹3,000 கோடி.. மகளிருக்கு நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக, தமிழகம் முழுவதுமுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நாளை(செப்.16) ₹3,000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கடனுதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் DCM உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் 2.55 கோடி பெண்கள் பயன்பெறுவர். SHARE IT.