News August 4, 2024
INDvsSL: இலங்கை அணிக்கு பின்னடைவு

இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டி தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், இலங்கை வீரர் ஹசரங்கா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். தசைப்பிடிப்பால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்ததற்கு, அவர் பெரும் பங்காற்றினார்.
Similar News
News January 20, 2026
சட்டவிரோத குடியேறிகளை இந்தியா அனுமதிக்காது: PM

சட்டவிரோத குடியேறிகள் நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக PM மோடி பேசியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், உலகின் சக்திவாய்ந்த நாடுகள்கூட சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து நாடுகடத்துகின்றன. அவைகளை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று உலக நாடுகள் கேட்கவில்லை என்றும், அதே போன்று நமது இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவும் அனுமதிக்காது எனவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
‘ஜன நாயகன்’ மறு ஆய்வுக்கு கால தாமதம் ஆனது ஏன்?

‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கு உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு ஆய்வு செய்வது குறித்து எத்தனை நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மறு ஆய்வுக்கு 20 நாள்களில் குழு அமைக்க வேண்டும் என சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. மேலும் மறு ஆய்வு குழு சான்றிதழ் வழங்க மறுத்தால் ஐகோர்ட்டை நாடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
News January 20, 2026
PM KISAN திட்ட தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்!

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 (ஆண்டுக்கு ₹6,000) வழங்கி வருகிறது. அதனை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, ₹9,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் PM KISAN திட்ட தவணைத் தொகையை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம்.


