News April 1, 2025
INDvsENG: முக்கிய கோப்பைக்கு ஓய்வு.. ஏன்?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து பட்டோடி டிராபியை விளையாடி வருகின்றன. Ex இந்திய வீரர் பட்டோடி பெயரில் நடத்தப்படும் இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுப்பதாக ENG கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கிரிக்கெட்டில் சாதித்த மற்ற வீரர்களின் பெயரையும் பயன்படுத்துவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு INDvsENG தொடரின் போது கோப்பைக்கான புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படும்.
Similar News
News April 2, 2025
பணியின் இறுதிநாளில் உயிரை விட்ட சோகம்…!

ஜார்கண்ட் ரயில் விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்டுக்கு அன்றுதான் கடைசி பணி நாள் என்ற சோக செய்தி வெளியாகியுள்ளது. சரக்கு ரயில்கள் நேற்று மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்கேஸ்வர் மாலும் ஒருவர். மகிழ்ச்சியுடன் ஓய்வு நாட்களை கழித்திருக்க வேண்டிய அவர், இப்போது உயிருடன் இல்லை. பணியின் கடைசி நாள், அவரது வாழ்வின் கடைசி நாளாக மாறியுள்ளது.
News April 2, 2025
தட்கல் டிக்கெட் கேன்சல்.. பணம் திருப்பி தரப்படுமா?

ரயிலில் அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி அமலில் உள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை ஏதேனும் காரணத்திற்காக பயணிகள் கேன்சல் செய்தால், டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என சந்தேகம் இருக்கும். தட்கல் டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தால், அதற்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எனில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டபிறகு பணம் திருப்பித் தரப்படும்.
News April 2, 2025
CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <