News April 28, 2025
சிந்து நதி விவகாரம்.. அச்சத்தில் பாக். விவசாயிகள்

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தானை பாலைவனமாக்கும் என அந்நாட்டு விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயம் இல்லாமல் மக்கள் பட்டினியில் உயிரிழப்பர் எனவும், மொத்த நாட்டு மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என இந்தியா கூறிவருகிறது.
Similar News
News April 29, 2025
தூங்கா நகரத்தை நோக்கி விஜய்!

தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. மே மாதம் பூத் கமிட்டி கருத்தரங்கம் அங்கு நடைபெற உள்ளது. கோவையில் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
ஐநா-வில் பாக்., முகத்திரை கிழித்த இந்தியா

பாக்., செயல்பாட்டை வன்மையாக கண்டித்து ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியுள்ளார். பாக்., அமைச்சரே பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், காட்டுத்தனமாக அந்நாட்டின் செயல்பாடுகள் உள்ளதாகவும் ஐநா-வில் சாடினார்.
உலகளாவிய மன்றத்தை பயன்படுத்தி இந்தியா மீது பாக்., ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
மர்மமான முறையில் ‘Family Man 3’ நடிகர் மரணம்!

நடிகர் ரோஹித் பாஸ்போர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அசாமைப் சேர்ந்த இவர், ஞாயிறு மதியம் நண்பர்களுடன் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் ரோஹித் சமந்தாவுடன் ‘Family man 3′-ல் ரோஹித் நடித்துள்ளார்.