News August 10, 2024

இந்தியாவின் UPI சேவை மாலத்தீவில் அறிமுகம்

image

மாலத்தீவில் UPI அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான இந்த ஒப்பந்தம் மூலம், சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகளவில் 40% UPI பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்த அவர், இது ஒரு டிஜிட்டல் புரட்சி என்றார். முன்னதாக, இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்த சேவை அறிமுகமானது.

Similar News

News November 25, 2025

நயினாரிடம் REPORT கேட்கும் தலைமை

image

பாஜக தேசிய தலைவர்களை சந்திப்பதற்காக இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் நயினார் நாகேந்திரனின் சுற்று பயணத்திற்கு ஆதரவு இல்லை என செய்தி கிடைத்துள்ளதால், அவரிடம் பாஜக தலைமை ரிப்போர்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயினாரின் செயல்பாடுகள் டெல்லி தலைமைக்கு திருப்திகரமாக இல்லை எனவும், சில ஆலோசனைகள் வழங்கவே டெல்லிக்கு அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

News November 25, 2025

புயல் சின்னம் உருவானது.. கனமழை வெளுக்கும்

image

அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது 27-ம் தேதிக்குள் புயலாக மாறக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இலங்கை அருகே 48 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.

News November 25, 2025

வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

image

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

error: Content is protected !!