News March 29, 2025

இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

image

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.

Similar News

News December 26, 2025

விஜய்யுடன் பணியாற்றுவது கொடுப்பினை: KAS

image

நான் சேர்ந்த இடம் (தவெக), கோட்டைக்கு செல்கிற இடம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். விஜய் தன்னிடம் மனம் திறந்து பேசியதாக கூறிய அவர், இப்படிப்பட்ட தலைவரோடு பணியாற்ற, தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் புகழ்ந்தார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு பணியாற்றிய தனக்கு, தற்போது அடுத்த தலைமுறை தலைவரான விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

வங்கி கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

image

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கி வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு தமிழக விவசாயிகளுக்கு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலை துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

56 பந்துகளில் சதம் அடித்து மிரட்டிய ரிங்கு சிங்

image

விஜய் ஹசாரே தொடரில் கேப்டன் ரிங்கு சிங்கின் மரண அடியால் உ.பி. அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகரை வீழ்த்தியுள்ளது. 5-வது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் 60 பந்துகளில், 11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து சண்டிகர் பவுலர்களை திக்குமுக்காட வைத்தார். இதனையடுத்து 367 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

error: Content is protected !!