News March 29, 2025

இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

image

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.

Similar News

News March 31, 2025

அமமுகவினர் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்

image

தஞ்சாவூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் மொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்துள்ளனர். அமமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள், காங்கிரஸ், மதிமுக, பாஜக நிர்வாகிகள் பலர், ஓபிஎஸ் அணி நிர்வாகி என பலர் இன்று EPSஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியினை பலப்படுத்தும் பணிகளில் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

News March 31, 2025

தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் பேருயிர்கள்

image

கோவை – பாலக்காடு ரயில் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக யானைகள் ஏதும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அடர்ந்த காடுகளைக் கொண்ட இந்த வழித்தடத்தில் அவ்வப்போது யானைகள் ரயிலில் அடிபடுவதுண்டு. அதனை தடுக்கும் வகையில், அதிநவீன கேமரா கோபுரங்கள் உள்ளிட்டவற்றுடன் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.

News March 31, 2025

உலகிலேயே சக்திவாய்ந்த ஏவுகணை எது தெரியுமா?

image

உலகிலேயே மிகவும் அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை, ரஷ்யாவிடமே உள்ளது. R-36M என்று அழைக்கப்படும் அந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 16,000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை தாக்கும் திறனுடையது. இதற்கடுத்து அதிக தொலைவு செல்லும் ஏவுகணை சீனாவிடமுள்ள Dongfeng-41 ஏவுகணையாகும். அது 15,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

error: Content is protected !!