News March 29, 2025
இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.
Similar News
News December 26, 2025
குறைந்த வட்டியில் கடன்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும், 18 – 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
காலையில் இந்த மூலிகை தேநீர் குடிங்க.. அவ்வளோ நல்லது

ஃபோலிக் ஆசிட் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஓமம் தேநீர் மிகவும் நல்லது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் செரிமானம் மேம்படவும் இது உதவுமாம். ➤நீரில் கிரீன் டீயை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும் ➤அதில், ஓமத்தை சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள் ➤அந்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால், சத்தான ஓமம் தேநீர் ரெடி. SHARE IT.
News December 26, 2025
FLASH: தவெகவில் விஜய் எடுத்த புதிய முடிவு

தவெகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது விஜய்க்கு புது தலைவலியை கொடுத்துள்ளது. இந்நிலையில், மா.செ.,க்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மா.செ.,க்கள் தாங்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை மா.பொ.,க்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமாம். இதற்காக வருவாய் மாவட்ட வாரியாக மா.பொ.,க்கள் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


