News April 16, 2024
இந்தியாவின் மிகவும் வயதான விமான பைலட் காலமானார்

இந்திய விமானப் படையின் மிகவும் வயதான பைலட்டான தலீப் சிங் மஜிதியா தனது 103ஆவது வயதில் நேற்று காலமானார். 1920ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிம்லாவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது 1940ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். 1941ஆம் ஆண்டு சென்னையில் கடலோர ரோந்து பாதுகாப்பு பணியில் பணியாற்றியுள்ளார். 1949ஆம் ஆண்டு காத்மாண்டுவில் முதல் விமானத்தை தரையிறக்கிய பைலட் என்ற பெருமை இவரையே சேரும்.
Similar News
News April 29, 2025
இபிஎஸ் பம்மியதற்கு, மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி

மாநில உரிமையை பறிக்கும் பாஜகவுடன் சேர்ந்த EPS-க்கு 2026-ல் மக்கள் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி; கரப்ஷன் ஆட்சியை நடத்திய இபிஎஸ், அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி ஆட்சி என்ற போதே இபிஎஸ்ஸின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக சாடினார்.
News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.