News March 1, 2025
உயரும் இந்தியாவின் செல்வாக்கு: PM மோடி

உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா காட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், உலக நாடுகளின் தொழிற்சாலையாக இந்தியா மாறியுள்ளதாகவும், இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புவதாகவும் கூறினார்.
Similar News
News March 2, 2025
இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. வதோதராவில், முதலில் களமிறங்கிய SAM அணி 13.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய INDM அணி, 11 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ராயுடு 41, நெகி 21, இர்ஃபான் பதான் 13, சச்சின் 6 ரன்கள் எடுத்தனர்.
News March 1, 2025
பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்று கட்டாயம்: மத்திய அரசு

2023 அக். 1ஆம் தேதி, அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்று கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 1967 பாஸ்போர்ட் சட்ட 24ஆவது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதில் 2023 அக்டோபருக்கு முன்பு பிறந்தோருக்கு பிறப்பு சான்று கட்டாயமில்லை, அதன்பிறகு பிறந்தோருக்கு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.
News March 1, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: ஸ்டாலின் இரங்கல்

<<15623438>>கன்னியாகுமரி<<>> அருகே மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி, விஜயன், சோபன், மனு, ஜெஸ்டிஸ் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்ததோடு, CM பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.