News September 13, 2024
இந்தியாவின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் ரெடி

இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை முக்கிய நகரங்களில் இயக்க ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் 16ம் தேதி முதல் குஜராத் மாநிலம் புஜ் – அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இது முழுவதும் AC வசதி கொண்டது. முதலில் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. SHARE IT
Similar News
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் குறைந்தது: IMD

சென்னையில் இருந்து 510 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 4 கிமீ வேகத்தில் பயணித்து வந்த புயல் இப்போது 3 கிமீ அளவுக்கு தனது வேகத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
எம்மா எம்மா இன்னாமா இது…

புது புது பியூட்டி டிப்ஸ் டிரெண்டாவது வழக்கம். அதுபோல தற்போது பெண்கள் மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவுவது டிரெண்டாகி வருகிறது. மாதவிடாய் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள், புரதம் இருப்பதால் இது முகத்தை பொலிவாக்குவதாக இதை செய்பவர்கள் சொல்கின்றனர். ஆனால், ரத்தத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால், இது முகத்தில் Dermatitis எனும் மோசமான நோயை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News November 28, 2025
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்: ரகுபதி

செங்கோட்டையன் தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்வார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்துள்ளார். விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்லும் அசைன்மென்ட்டிற்காக தான் செங்கோட்டையன் அங்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.


