News September 13, 2024

இந்தியாவின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் ரெடி

image

இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை முக்கிய நகரங்களில் இயக்க ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் 16ம் தேதி முதல் குஜராத் மாநிலம் புஜ் – அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இது முழுவதும் AC வசதி கொண்டது. முதலில் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. SHARE IT

Similar News

News November 15, 2025

300 MBBS காலியிடங்கள்… மாணவர்களுக்கு ஒரு சான்ஸ்!

image

TN-ல் மருத்துவ படிப்புகளுக்கு 3 கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகும் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. சில தனியார் கல்லூரிகள் நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் கேட்டதால் பல மாணவர்கள் விலகியதே இதற்கு காரணம். இதுபற்றி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சுற்று கவுன்சிலிங் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சற்று குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இது ஒரு நல்ல சான்ஸ் என கூறப்படுகிறது.

News November 15, 2025

பொன்முடிக்கு நெருக்கடி: விழுப்புரம் திமுகவில் விரிசலா?

image

பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கியதை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடினாலும், எதிர் தரப்பினரான விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியாம். இதனால்தான் கடந்த நவ.11-ல் SIR-க்கு எதிராக நடந்த திமுக ஆர்ப்பாட்டத்திற்கான பேனரில் கூட பொன்முடியின் போட்டோ இடம்பெறவில்லை என்கின்றனர். இப்படியே போனால் விழுப்புரத்தை மறந்துவிட வேண்டியதுதான் என திமுகவினர் சிலர் புலம்புகின்றனர்.

News November 15, 2025

மாணவர்களுக்கு ₹25,000 வரை உதவித்தொகை

image

பழங்குடியினர் தொடர்பான ஆய்வு & ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குகிறது தொல்குடியினர் புத்தாய்வு திட்டம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

error: Content is protected !!