News March 18, 2024

இந்தியாவின் முதல் தபால் நிலையம்

image

இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட தபால் நிலையம் ஒன்று தற்போது 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1774இல் மேற்கு வங்க மாகாண கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் தபால் நிலையம் இது. தற்போது 250ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் ஆரம்பகாலத்தில் தபால் எப்படி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

Similar News

News January 24, 2026

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இன்று வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT

News January 24, 2026

இலை துளிர்த்து தாமரை மலரும்: அண்ணாமலை

image

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.

News January 24, 2026

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சி, திரு​வள்​ளூர், தி.​மலை, விழுப்​புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!