News April 2, 2025
தூக்கத்தை தொலைக்கும் இந்தியர்கள்

இந்தியர்களில் 3-ல் ஒருவர் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக Wakefit நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58% பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44% பேர் விழித்தெழும்போது சோர்வாக உணருவதாகவும் தெரிய வந்துள்ளது. 18% பேர் காலை 9 மணிக்கு மேல் தான் எழுகின்றனராம். படுக்கையில் செல்போன் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாம். நீங்க எப்படி?
Similar News
News August 27, 2025
குடும்பத்திற்கு ₹3,000.. CM ஸ்டாலின் அதிரடி முடிவு

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News August 27, 2025
விஜய்க்கு ஆதரவு.. பிரேமலதா எடுத்த திடீர் முடிவு!

TVK மாநாட்டில் தொண்டர்களை பவுன்சர்கள் தள்ளிவிட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான் எனவும் திட்டமிட்டு யாரும் செய்வதில்லை என்றும் விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். TN-ல் கூட்டணி ஆட்சி அமைவதை DMDK வரவேற்பதாகவும், அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை, DMDK, TVK-வுடன் நெருங்குவதாக பலரும் கூறுகின்றனர்.
News August 27, 2025
SK-ன் வெற்றிக்கு காரணம் என்ன? முருகதாஸ் விளக்கம்

கடந்த 15 வருடங்களில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தவர்கள் என்றால் அனிருத், SK தான் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இவர்களில் SK மக்களை அதிகளவில் கவர்ந்துவிட்டார் என்றும், மதராஸி படப்பிடிப்பின் போது, அவருக்காக கூடிய ரசிகர் கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டதாகவும் கூறினார். நிறைய திறமையான புதுமுக இயக்குநர்களுடன் அவர் பணியாற்றியதே SK-ன் வெற்றிக்கு காரணம் என்றார்.