News April 2, 2025

தூக்கத்தை தொலைக்கும் இந்தியர்கள்

image

இந்தியர்களில் 3-ல் ஒருவர் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக Wakefit நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58% பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44% பேர் விழித்தெழும்போது சோர்வாக உணருவதாகவும் தெரிய வந்துள்ளது. 18% பேர் காலை 9 மணிக்கு மேல் தான் எழுகின்றனராம். படுக்கையில் செல்போன் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாம். நீங்க எப்படி?

Similar News

News March 29, 2026

தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு ready-ஆ?

image

இன்னும் சற்று நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை CM ஸ்டாலின் வெளியிட உள்ளார். அதற்கு ஹைப் ஏத்தும் விதமாக தமிழ்நாடே தலைப்புச் செய்திக்கு ready-ஆ? என தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 29, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு UPDATE

image

ஆட்சி மாறினால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் குறித்து அதிமுக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. SHARE

News March 29, 2026

₹10 கோடி கிடைத்தும் நேர்மையை கைவிடாத பெண்

image

வங்கி கணக்கில் தவறுதலாக ₹1,000 வரவு வைக்கப்பட்டாலே அதை யாரும் திருப்பி தர மாட்டார்கள். ஆனால் உ.பி.,யை சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணியோ இதற்கு மாறாக தனது நேர்மையை வெளிபடுத்தியுள்ளார். அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,99,49,588 வரவு வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட தொடாமல், இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!