News March 29, 2024
மலேசியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. சிங்கப்பூரில் ஆசிய கூடைப்பந்து (3×3) தொடர் நடக்கிறது. அதன் தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் ஸ்ரீகலா ராணி, அனிஷா, காவ்யா, புஷ்பா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 20-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
Similar News
News December 7, 2025
இந்த மல்டி ஸ்டார் படமெல்லாம் பார்த்திருக்கீங்களா?

கேமியோ ரோல்களுக்கு கிடைக்கும் கைதட்டல்களுக்காக, கதையில் வேண்டுமென்றே சில கேரக்டர்கள் திணிக்கப்படுவதாக சமீப காலமாக விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், 1980, 90 காலகட்டங்களில் 2 – 4 நடிகர்கள் வரை மெயின் ரோலிலேயே ஒரே படத்தில் நடித்துள்ளனர். அப்படமும் இன்று வரை ரசிக்கும்படியாகவே உள்ளது. அப்படிப்பட்ட சில படங்களை மேலே கொடுத்துள்ளோம். அதை swipe செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.
News December 7, 2025
BREAKING: செங்கோட்டையன் அறிவித்தார்.. விஜய் புதிய முடிவு

ஈரோட்டில் வரும் 16-ம் தேதி விஜய்யின் கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18493694>>முன்னதாக பவளத்தாம்பாளையத்தில்<<>> அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு மற்றொரு கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் ஈரோட்டில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் சூளுரைத்தார்.
News December 7, 2025
துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

தெ.ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா அருகே உள்ள சால்ஸ்வில்லே நகரில், மதுபான விடுதியில் நுழைந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 3 வயது, 12 வயது என 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


