News September 14, 2025
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா- பாக் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு நமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த பாக்.குடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூப்

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த லைப்ஸ்டைல் கோச் லூக் குட்டினோ அளிக்கும் சூப் ரெசிபி: தேவையான பொருள்கள் : சர்க்கரை வள்ளி கிழங்கு-1, பூண்டு -1, ஸ்பிரிங் ஆனியன்-கொஞ்சம், பார்ஸ்லி, ரோஸ்மெரி -சிறிதளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சூப் தயாரிக்கவும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி சளி, ஃப்ளூ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ட்ரை பண்ணலாமே!
News September 14, 2025
பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

+1, +2 மாணவர்களுக்கு செப்.10 முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு நாளை முதல் 26-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, செப்.27 – அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் நண்பர்களே! SHARE IT.
News September 14, 2025
வடிவேலுவை விட விஜய்க்கு கூட்டம் குறைவு: ரகுபதி

திருச்சியில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தின் போது பொது சொத்துக்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக வார விடுமுறையில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்கிறார் எனக் கூறிய அவர், 2011ல் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்யும்போது, விஜய்க்கு வந்ததை விட அதிக கூட்டம் வந்ததாகவும் தெரிவித்தார்.