News January 23, 2025
உள்ளூர் போட்டியில் சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!

இன்றைய ரஞ்சி தொடரின் போட்டிகளில் தேசிய அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் களமிறங்கி சொதப்பி இருக்கிறார்கள். ரோஹித் 3 ரன், ஜெய்ஸ்வால் 4 ரன், ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன், துபே 0, ரஹானே 12 ரன்கள் என அவுட்டாகினார்கள். அதே போல, ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், சுப்மன் கில் 4 ரன்னிலும் அவுட்டாகி இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டியிலேயே இப்படி சொதப்புகிறார்களே என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
Similar News
News December 28, 2025
தனியா? அணியா? விஜய் சூசகம்

தேர்தல் கூட்டணி குறித்து ‘ஜனநாயகன்’ விழாவில் தனது நிலைப்பாட்டை விஜய் சூசகமாக கூறியுள்ளார். எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்றும், 33 ஆண்டுகளாக மக்களுடன் இருப்பதால் அதுவும் ஒரு மிகப்பெரிய அணிதானே எனவும் பேசினார். இதில் சஸ்பென்ஸ் வைத்தால் தான் கிக் இருக்கும் எனக் கூறிய விஜய், இதை கைதட்டலுக்காக பேசவில்லை மனதில் இருந்து மக்களுக்காக பேசுகிறேன் என தெரிவித்தார். கூட்டணியை தான் அணி என்று கூறுகிறாரோ?
News December 28, 2025
மார்கழி மாத கலர் கோலங்கள்!

வளைத்து, நெளித்து, சுழித்து போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுக, துக்க பின்னல்களால் நிறைந்தவை என்பதையும், சுழிகள் போல் துன்பம் வந்தாலும் துணிவுடன் இருக்கவேண்டும் என்ற தைரியத்தையும் உணர்த்துகின்றன. எனவே, மார்கழி மட்டுமல்ல வருடத்தின் 365 நாள்களும் கோலமிட தவறாதீர்கள். அந்த வகையில் சில ஸ்பெஷலான கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.
News December 28, 2025
தலைமை செயலாளர்களுடன் PM மோடி ஆலோசனை

டெல்லியில், PM மோடி தலைமையில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, பல்வேறு பிரச்னைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனிதவளம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.


