News January 23, 2025

உள்ளூர் போட்டியில் சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!

image

இன்றைய ரஞ்சி தொடரின் போட்டிகளில் தேசிய அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் களமிறங்கி சொதப்பி இருக்கிறார்கள். ரோஹித் 3 ரன், ஜெய்ஸ்வால் 4 ரன், ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன், துபே 0, ரஹானே 12 ரன்கள் என அவுட்டாகினார்கள். அதே போல, ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், சுப்மன் கில் 4 ரன்னிலும் அவுட்டாகி இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டியிலேயே இப்படி சொதப்புகிறார்களே என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Similar News

News December 2, 2025

சாகும் வரை உண்ணாவிரதம்.. பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

image

SIR மூலம் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை அளிக்க கூடாது என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை ECI படுகுழியில் தள்ளுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், ECI & மத்திய அரசை கண்டித்து நாளை (டிச.3) காலை 8 மணி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவுக்காக வாக்கு சேகரிப்பேன் என மன்சூர் கூறியிருந்தார்.

News December 2, 2025

பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

image

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 2, 2025

‘Word of the Year’ இது தான்!

image

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.

error: Content is protected !!