News June 16, 2024
இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் அடிக்கவே, 265 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய தெ.ஆ.,37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Similar News
News September 10, 2025
சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News September 10, 2025
இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?
News September 10, 2025
இந்தியா ஒரு ரத்த காட்டேரி: டிரம்பின் ஆலோசகர்

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் USA-ன் ரத்தத்தை உறிஞ்சும் ரத்த காட்டேரிகளாக இருப்பதாக டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்துள்ளார். வரலாற்று ரீதியாகவே ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்க்கும் பிரிக்ஸ் நாடுகள், எவ்வளவு நாள் ஒற்றுமையாக இருக்கும் என்பதை பார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா உடன் வர்த்தகத்தில் ஈடுபடாவிட்டால் அந்நாடுகள் பிழைப்பதே கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.