News April 17, 2024
உலகக் கோப்பையில் கவனம் செலுத்தும் இந்திய அணி

டி20 உலகக் கோப்பைத் தொடரில், ரோஹித் – கோலி ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ரோஹித், டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு ஐபிஎல் தொடரில் பாண்டியா பந்துவீச்சில் கவனம் செலுத்துதல், ஷுப்மன் கில்லை பேக்கப் ஒப்பனராக்குதல், ரியான் பராக்கை அணியில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது.
Similar News
News November 15, 2025
Sports Roundup: KKR பவுலிங் கோச்சானார் டிம் சௌதி

*SA-க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2-ம் நாள் ஆட்டத்தை, இந்தியா 37/1 ரன்களுடன் இன்று தொடங்குகிறது. *ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. *உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், USA வீரருக்கு எதிரான போட்டியை இந்திய வீரர் அர்ஜுன் டிரா செய்தார். *ஃபிபா உலகக்கோப்பை தகுதி சுற்றில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. *KKR பவுலிங் கோச்சாக டிம் சௌதி நியமனம்
News November 15, 2025
20-ம் தேதி வரை மழை வெளுக்கும்

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, தமிழத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 3 நாள்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
News November 15, 2025
ஜாமின் நிபந்தனையில் தளர்வு கோரி செந்தில் பாலாஜி மனு

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் SC-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ED இயக்குநர் முன் கடந்த 12 மாதங்களில் 116 முறை நேரில் ஆஜரானதாகவும், அதனை கருத்தில் கொண்டு ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ED பதில் அளிக்க SC உத்தரவிட்டுள்ளது.


