News April 2, 2025

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம்

image

டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கை எதிரொலியாக கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டன. இந்நிலையில், இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வடைந்து 76,617ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 23,332ஆக நிறைவடைந்தது. 2,755 பங்குகள் உயர்வுடனும், 1,048 பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.

Similar News

News December 6, 2025

Way2News ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15K-₹40K சம்பாதியுங்கள்

image

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோக்கள் ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்புங்கள். கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News December 6, 2025

சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

image

தவெகவின் மா.செ.க்கள், நிர்வாகிகள் சிலர் திமுக, அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், கட்சியின் பேஸ்மெண்ட்டில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இதற்கான ஸ்பெஷல் அசைன்மென்டை செங்கோட்டையனிடம் அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் KAS மா.செ.க்களுடன் மீட்டிங் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 6, 2025

சாகவே சாகாத ஜெல்லிமீன் தெரியுமா?

image

உலகில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் அறிவியல் அதிசயங்களில் ஒன்று தான், சாவே இல்லாத ஜெல்லிமீன். Turritopsis dohrnii எனப்படும் இந்த கடல் உயிரி, மரண தருவாயை நெருங்கும்போது, அதன் செல்களை மாற்றியமைத்து, மீண்டும் தனது ஆரம்ப நிலையான ‘பாலிப்’ (பிறப்பு) நிலைக்கு திரும்புகிறது. மீண்டும் புதிய ஜெல்லிமீனாக முதிர்ச்சி அடைகிறது. வேட்டையாடுதல் இல்லாவிட்டால், இந்த சுழற்சியை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

error: Content is protected !!