News January 2, 2025

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 387 (1.67%) புள்ளிகளும் சென்செக்ஸ் 1,218 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. புத்தாண்டையொட்டி பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 14, 2025

மடியில் குழந்தையுடன் DSP இன்டர்வியூ வந்த பெண்!

image

தாய் பாசத்தை வெல்ல இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவமும் சான்று. ம.பி.யின் Public Service Commission நேர்காணலில், வர்ஷா படேல் தனது 20 நாட்களே ஆன குழந்தையை மடியில் தாங்கியபடி பங்கேற்றுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தேர்வெழுதி 11-வது ரேங்க் பிடித்த வர்ஷா, குழந்தையுடனே நேர்காணலை சந்தித்தார். தாயாகிய உறுதியும், பெண்மையின் சக்தியும் ஒருசேர அவர் DSP-யாக தேர்வாகி இருக்கிறார்.

News September 14, 2025

BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்.. முக்கிய அறிவிப்பு

image

நாளை மறுநாள், EPS டெல்லி செல்வதால் தருமபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், EPS-ம் டெல்லி செல்ல உள்ளார். இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளுக்கு பதிலாக 28, 29-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

News September 14, 2025

வருத்தம் தெரிவித்தார் விஜய்

image

பெரம்பலூரில் மக்களிடையே பேசாமல் சென்றதற்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயமாக மீண்டும் வேறொரு நாளில் பெரம்பலூர் மக்களை சந்திக்க வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். திருச்சி, அரியலூரில், தேர்தல் பரப்புரையை கேட்க வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களையும் விஜய் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!