News April 16, 2024

இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் வீழ்ச்சி

image

இஸ்ரேல்-ஈரான் போர்ப் பதற்றத்தால், இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்துள்ளன. ஈரான்- இஸ்ரேல் இடையே போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், உலகப்பங்குச்சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் 2ஆவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 286 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 68 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

Similar News

News April 29, 2025

செப்.6-ம் தேதி காவலர் நாள்: CM ஸ்டாலின்

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அந்த நாளில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்த ஸ்டாலின், குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

News April 29, 2025

இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 29, 2025

மேலே பாம்பு.. கீழே நரி.. மத்திய அரசை தாக்கிய CM ஸ்டாலின்!

image

மேலே பாம்பு.. கீழே நரி.. விழுந்தால் அகழி, இதற்கு இடையில் மாட்டியவர் போல மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடிக்கு இடையே சாதனை செய்கிறோம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக, அமைதியாக இருப்பதால் இங்கு சாதி, மத வன்முறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலவரத்தை தூண்ட சிலர் நினைத்தாலும் மக்கள் அதனை முறியடித்து விடுகிறார்கள் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!