News April 4, 2025
இந்திய பங்குச் சந்தையில் ₹8.5 லட்சம் கோடி இழப்பு

அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 914 புள்ளிகள் சரிந்து 75,381 புள்ளிகளிலும், நிப்ஃடி 343 புள்ளிகள் குறைந்து 22,906 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ₹8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 18, 2025
நாயால் வந்த ED ரெய்டு!

பெங்களூரை சேர்ந்த சதீஷ் ₹50 கோடிக்கு ஓநாய் இன கேடாபாம்ப் ஒகாமி நாய் வாங்கியதா சோஷியல் மீடியாவுல பதிவிட்டாரே ஞாபகமிருக்கா? நெட்டிசன்கள் கூட அவர தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. ஆனா, இதுல தான் ட்விஸ்ட். அது ஓநாய் இன நாயே இல்லையாம். பக்கத்து வீட்டுல வளர்ற இந்திய இன நாயாம். விலை கூட ஒரு லட்சமாம். ED அவரு வீட்டுக்கு போயி கிடுக்கிப்பிடி போட்டதுல சதீஷ் சரண்டரானாரு. எதுக்கு இந்த பெருமை?
News April 18, 2025
அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.
News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, <<16081235>>முன்னாள் MLA<<>> உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டு கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.