News July 25, 2024
பாரிஸை பாதுகாக்கும் பணியில் இந்திய வீரர்கள்

பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக்ஸ் பிரம்மாண்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்நகரம் AI உதவியுடன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், G20 மாநாட்டில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட CAPF-ஐ சேர்ந்த 10 வெடிகுண்டை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட மோப்ப நாய்களும், 17 பயிற்சியாளர்களும் அங்கு சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
புத்தகம் சுமந்த பிஞ்சுகள்.. புதைக்குழிக்குள்..

இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளில் பல சிரிப்புகள் புதையவுள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான மாணவிகளை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிகள் இவை. பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்ற குழந்தைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோர்கள் <<19277394>>கதறி அழுத காட்சி<<>> நெஞ்சை உலுக்குகிறது. அதிகார வெறிக்காக நடக்கும் போரில் ஏன் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளும், அப்பாவி மக்களும் பலியாக வேண்டும்?
News March 3, 2026
சங்கீதாவுக்கு இதை செய்யவில்லை.. விஜய் REWIND

விஜய் – சங்கீதா விவகாரம் பேசுபொருளான நிலையில், NDTV-க்கு அளித்த பழைய பேட்டியில் விஜய் பேசியது வைரலாகிறது. அதில், திருமணத்திற்கு முன்பு தனக்கு நிறைய பரிசுகளை சங்கீதா கொடுப்பார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அவை குறையத் தொடங்கின. காரணம், நான் அவர் கொடுக்கும் பரிசுகளுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என விஜய் கூறியுள்ளார். தன்னை அதிகளவில் புரிந்துகொண்டு நடப்பவர் சங்கீதா என்றும் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
கூட்டணியை இறுதி செய்ய காங்கிரஸ் தீவிரம்..

கூட்டணியை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சியினர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம், ஸ்டாலினை சிதம்பரம் சந்திக்க இருக்கும் நிலையில், மறுபுறம் கார்கே, சோனியா காந்தி, ராகுல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக 11 மணி முதல் ஆலோசனை செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக தேர்தல், திமுக கூட்டணியில் இருந்து விலகினால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கின்றனர்.


