News August 18, 2024
இந்தியர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் தனது கடையில் நடந்த வழிப்பறியின் போது மைனக் படேல் (36), சிறுவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வயது காரணமாக சிறுவனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. படேலுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளார். மேலும், அவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடைக்கு வரும் அனைவரிடமும் அவர் அன்பாக நடந்து கொள்வார் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 14, 2025
ஆம்னி பஸ்களில் ஜெட் வேகத்தில் உயர்ந்த கட்டணம்!

3 நாள்கள் தொடர் விடுமுறையால் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் நிலையில், ஆம்னி பஸ்களில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,700, மதுரைக்கு ₹3,800, நெல்லைக்கு ₹4,000, தூத்துக்குடிக்கு ₹3,500, கோவைக்கு ₹3,700 என தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 26280445 எண்களில் புகார் அளிக்கலாம் என TN அரசு தெரிவித்துள்ளது.
News August 14, 2025
உரிமைத் தொகை.. 12 லட்சம் பேரின் நிலை என்ன?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது விண்ணப்பங்களின் நிலையை பரிசீலிப்பதில் ஏன் தாமதம் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும், ஆனால் 1 மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஏமாற்றுவேலை என்றும் காட்டமாக கூறியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
News August 14, 2025
ஆபரேஷன் சிந்தூர்: 9 பேருக்கு ‘வீர் சக்ரா’ விருது

79-வது சுதந்திர தினத்தையொட்டி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த விமானப்படை வீரர்களுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் கேப்டன்கள் ரன்ஜீத் சிங் சித்து, மணீஷ், அனிமேஷ் பட்னி, குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்குவாட்ரன் லீடர்கள் சர்தக், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மற்றும் பிளைட் லெப்டினன்ட் ஆர்ஷ்வீர் சிங் தாகூர் ஆகியோர் இவ்விருதை பெறவுள்ளனர்.