News August 18, 2025
இந்திய ரயில்வேயின் ஹைடெக் ஐடியா..!

பசுமை ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பணிகள், வாரணாசியில் உள்ள பனாரஸில் தொடங்கியுள்ளது. அங்கு, 28 பேனல்கள் அமைத்து 15KWp மின்சாரம் தயாரித்து ரயில் இன்ஜின் இயக்கப்பட்டதாக X தளத்தில் ரயில்வே பதிவிட்டுள்ளது. நல்ல முயற்சி என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
Detox Juice உண்மையிலேயே பயனுள்ளதா?

உடலை சுத்தப்படுத்துவதற்காக ABC ஜூஸ், கற்றாழை ஜூஸ் என பல வகையாக Detox Juice-களை பலர் அருந்துகின்றனர். ஆனால் இந்த ஜூஸ்கள் உண்மையிலேயே நமக்கு பயனளிக்கிறதா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் மருத்துவர்கள். நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற 24 மணி நேரமும் உழைக்கிறது கல்லீரல். இதனால் Detox juice நமக்கு தேவையற்றது எனவும் அது மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் வழி எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
News August 18, 2025
கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு நாளை மறுநாள் (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
ECI தலைமை ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்?

ECI-ன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3ல் இரு பங்கு ஆதரவு பெற்று இந்த பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றால், அந்த அதிகாரியை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.