News March 30, 2024

23 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

image

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில், அல்-கம்பார் கப்பலை ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் இடைமறித்தது. அப்போது, கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய இந்திய படை,12 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு 23 பேரையும் மீட்டதாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 10, 2025

அஜித்துடன் மோதுகிறாரா இயக்குநர் மிஷ்கின்?

image

‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தெரிகிறது. இதில் ஸ்ரீலீலா, சுவாசிகா என 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனிடையே படத்தின் வில்லனாக மிஷ்கின் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னணி இயக்குனரான மிஷ்கின், சமீபகாலமாக நடிகராக அசத்தி வருகிறார். ‘லியோ’ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின் நடித்தது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2025

பூரண மதுவிலக்கு.. பாமக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

image

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுவினால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் மாணவிகளை வேதனைக்கு ஆளாக்குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் அடங்கும்.

News August 10, 2025

பும்ராவை எதிர்ப்பது நியாயமற்றது: பாரத் அருண்

image

பும்ராவுக்கு எதிராக <<17357241>> முன்னாள் வீரர்கள் <<>>வைக்கும் குற்றச்சாட்டு நியாயமற்றது என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். பும்ராவுக்கு முதுகில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகச்சிறந்த பவுலராக புகழப்பட்ட பும்ரா, இப்போது விமர்சிக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!