News March 17, 2024
17 மாலுமிகளை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை!

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் வர்த்தக கப்பல் கடத்தல் முயற்சியை இந்தியக் கடற்படை போர்க்கப்பல் முறியடித்துள்ளது. சோமாலியா கடற்பகுதியில் சென்ற எக்ஸ் எம்.வி ரூவென் என்ற வர்த்தக கப்பலில் பிடித்த கொள்ளையர்கள் 17 மாலுமிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்து விரைந்த இந்தியாவின் ஐ.என்.எஸ் கோல்கட்டா போர்க்கப்பல், வர்த்தக கப்பலைச் சுற்றிவளைத்து எச்சரிக்கை விடுக்கவே, 35 கடற்கொள்ளையர்களும் சரணடைந்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
₹888 கோடி லஞ்சம்… கனவுகளை தகர்த்த அரசு: அண்ணாமலை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ₹888 கோடி லஞ்சம் பெற்று, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் நடைபெற்றிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை அரசு தகர்த்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு, CM ஸ்டாலின் தான் ஆணைகளை வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
News October 29, 2025
BREAKING: IND Vs AUS ஆட்டம் மழையால் ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. கான்பெர்ராவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்த போது மழை பெய்தது. போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட, இந்தியா 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் மழை பெய்திட, வானிலையும் சாதகமாக இல்லாததால் போட்டியை தொடர முடியாது என நடுவர்கள் அறிவித்தனர்.
News October 29, 2025
தவெகவுக்கு அழைப்பு விடுத்த திமுக

SIR நடவடிக்கை தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தவெகவின் CTR நிர்மல் குமார் கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவின் பூச்சி முருகன், பனையூருக்கு நேரடியாக சென்று N.ஆனந்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். வரும் நவ.2-ம் தேதி இக்கூட்டம் நடைபெறவுள்ளது.


