News March 17, 2024

17 மாலுமிகளை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை!

image

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் வர்த்தக கப்பல் கடத்தல் முயற்சியை இந்தியக் கடற்படை போர்க்கப்பல் முறியடித்துள்ளது. சோமாலியா கடற்பகுதியில் சென்ற எக்ஸ் எம்.வி ரூவென் என்ற வர்த்தக கப்பலில் பிடித்த கொள்ளையர்கள் 17 மாலுமிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்து விரைந்த இந்தியாவின் ஐ.என்.எஸ் கோல்கட்டா போர்க்கப்பல், வர்த்தக கப்பலைச் சுற்றிவளைத்து எச்சரிக்கை விடுக்கவே, 35 கடற்கொள்ளையர்களும் சரணடைந்துள்ளனர்.

Similar News

News November 24, 2025

தமிழ்நாட்டில் வாக்களிக்க வெளிமாநிலத்தவர் விருப்பம்

image

விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களில், 50%-ஐ பூர்த்தி செய்து பெற்றிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் படிவம் 8-ஐ நிரப்பி தமிழகத்தின் வாக்காளர்களாக இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

1.3 கோடி ஆண்டு பழமையான ஆமைக்கு ஷகீரா பெயர்!

image

புதிய இனம் கண்டறியப்பட்டால் பொதுவாக அறிவியல் முறைப்படி பெயர் வைக்கப்படும். ஆனால், கொலம்பியாவில் உள்ள தடாகோவா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 1.3 கோடி ஆண்டுகள் பழமையான ஆமை படிமத்துக்கு, கொலம்பிய ராப் பாடகி ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷகீராவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஆராய்ச்சியாளர் எட்வின் கேடனாவின் வாக்குறுதியின் பேரிலும் ‘Shakiremys colombiana’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

News November 24, 2025

பட்டியலின மக்களுக்கும் திமுக செய்யும் துரோகம்: அன்புமணி

image

SC ஆணையிட்டு ஓராண்டாகியும் பட்டியலின சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் என அன்புமணி கேட்டுள்ளார். இதேபோல வன்னியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கவில்லை என்ற அவர், வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் சமூகநீதி வழங்கக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை எனவும் விமர்சித்துள்ளார். இதனால், அநீதி இழைக்கும் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!