News April 19, 2024
இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்

இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி ஹரிகுமார் விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அந்தப் பதவிக்கு துணைத் தளபதி தினேஷ் திரிபாதியை மத்திய அரசு நியமித்துள்ளது. தினேஷ் திரிபாதி, 1985ஆம் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகாலம் கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவர் வருகிற 30ஆம் தேதி கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
Similar News
News November 11, 2025
விஜய் கட்சியின் சின்னம்.. நேரில் வழங்கினார்

தவெகவுக்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார். அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை, கப்பல் ஆகிய சின்னங்களும், தவெக நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலம் புதிதாக வரையப்பட்ட 5 சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு உங்க சாய்ஸ் எந்த சின்னம்? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 11, 2025
2026-க்கு பின் TTV அரசியலுக்கு முடிவு: ஆர்.பி.உதயகுமார்

அதிமுக ஒன்றிணைவது என்பது முடிந்துபோன ஒன்று; இனி அதற்கு சாத்தியமே இல்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜெ., இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு டிடிவி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஜெ., வகித்த பதவிக்கு ஆசைப்பட்டு துரோகம் செய்ததால், இந்த பிறவி அல்ல எந்த பிறவி எடுத்தாலும் அவர் தப்ப முடியாது. 2026 தேர்தலுக்கு பிறகு டிடிவியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
News November 11, 2025
இலவச வீட்டு மனை.. அரசு புதிய அறிவிப்பு

சென்னை போன்ற மாநகராட்சிகளை சுற்றியுள்ள பெல்ட் ஏரியாக்களில் பட்டா வாங்குவது தொடர்பாக, அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கும் இடம் அரசின் புறம்போக்கு இடமாக இருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள்: ★பாஸ்போர்ட் அளவு போட்டோ ★ரேஷன் & ஆதார் கார்டு ★சாதி & வருமான சான்றிதழ் ★பட்டா பெற விரும்பும் இடத்தில் 10 ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம் போன்றவற்றை சமர்ப்பிப்பது அவசியம்.


