News February 25, 2025
இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு 133 ரன்கள் இலக்கு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், இந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற INDM அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ENGM அணி, 20 ஓவர்களில் 132/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அம்ப்ரோஸ் 23, டேரன் மேடி 25 ரன்கள் எடுத்தனர். INDM அணி தரப்பில் குல்கர்னி 3, மிதுன், நெகி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Similar News
News February 26, 2025
KKR அணியை வழிநடத்த தயார்: வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் அணியை வழிநடத்த தயாராக அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். தனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருப்பதாகவும், கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் தனக்கு வராது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 26, 2025
இன்றைய (பிப். 26) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 26 ▶மாசி – 14 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM- 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:30 AM
▶குளிகை: 10:30 AM- 12:00 PM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் மா 4.51
News February 26, 2025
பிட்காயின் ஊழல்: 60 இடங்களில் சி.பி.ஐ. விசாரணை

பிட்காயின் ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 60 இடங்களில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, பலரும் இந்த டிஜிட்டல் வடிவிலான திட்டத்தில் இணைந்து பணம் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் ரூ.350 கோடி அளவுக்கு இத்திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி நடத்தப்படும் இதில், பலரும் ஏமாற்றப்பட்ட நிலையில், சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.