News May 19, 2024

இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்

image

ஜெர்மனியில் உள்ள குர்பல்ஸ் காலாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி யராஜி, 13.06 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெர்மனியில் தங்கம் வென்ற அவர், கடந்த வாரம் நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 13, 2025

கூச்சல், கும்மாளம்: விஜய்யை அட்டாக் செய்த CM ஸ்டாலின்

image

விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சியே திண்டாடிபோயுள்ளது. இந்நிலையில், கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என CM ஸ்டாலின் விஜய்யை சாடியுள்ளார். திமுக முப்பெரும் விழாவுக்காக தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதிய அவர், பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டு பார்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 13, 2025

உலக தடகள சாம்பியன்ஷிப்: மெடல் குவிக்குமா இந்தியா?

image

உலக தடகள சாம்பியன்ஷிப், ஜப்பானின் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.21 வரை நடைபெறும் இந்த தொடரில் 198 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, முரளி ஸ்ரீசங்கர், குல்வீர் சிங், அங்கிதா தியானி, பூஜா உள்பட 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகள்!

News September 13, 2025

‘MLA திருட்டு’ பற்றி ராகுல் வாய் திறப்பாரா? ராமா ராவ் கேள்வி

image

வாக்கு திருட்டை பற்றி பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் BRS கட்சியிலிருந்து காங்., கட்சி, MLA-க்களை திருடுவது பற்றி மௌனம் காப்பது ஏன் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் பிரச்னைகளை காட்டிலும் MLA-க்களை திருடுவதில் தான் மாநில காங்., அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!