News April 28, 2024
இரு பிரிவுகளில் கோப்பையை வென்ற இந்தியா

ஹம்டார்ட் ஸ்குவாஸ்டர்ஸ் நார்த்தர்ன் ஸ்லாம் தொடரில் இந்திய வீரர்கள் அனாஹத், சுராஜ் குமார் கோப்பையை வென்றுள்ளனர். டெல்லியில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் அனாஹத் சிங் 2-0 என்ற நேர்செட் கணக்கில், தென் கொரியாவின் ஹவேயியாங்கை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுராஜ் 3-2 என்ற செட் கணக்கில் இலங்கையின் ரவிந்து லக் ஸ்ரீயை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றினார்.
Similar News
News September 19, 2025
திமுக, தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, தவெக, தேமுதிக, பாமகவில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் சேலத்தில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மாற்றுக்கட்சியினர் பலரையும் கட்சியில் இணைத்து வருகிறது. அதேநேரம், திமுக மீது அதிருப்தி, மகளிர் உரிமைத்தொகை ₹1,000 கிடைக்கப்பெறாதவர்களை அதிமுகவில் இணைக்க நிர்வாகிகளுக்கு EPS புதிய அசைன்மென்டை கொடுத்துள்ளாராம்.
News September 19, 2025
5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வரும் 24-ம் தேதி வரை மாநிலத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 19, 2025
மனிதர்கள் vs AI: ஜனநாயகன் க்ளைமாக்ஸ் இதுவா?

‘ஜனநாயகன்’ படத்தின் க்ளைமாக்ஸில், மனித வடிவிலான AI ரோபோக்களின் சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்கள் VS AI என்ற கருப்பொருளின் அடிப்படையில், மிக பிரம்மாண்டமாக இந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும், இந்திய சினிமாவில் முன்முயற்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் படத்தில் ஏன் AI ரோபோக்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.