News April 19, 2024
ஏழை நாடாகவே இந்தியா இருக்கும்

2029ஆம் ஆண்டுக்குள் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தாலும், இந்தியா ஏழை நாடாகவே இருக்கும் என ஆர்பிஐ முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சவுதியை உதாரணமாக பாருங்கள். பணக்கார நாடாக மாறுவதற்கு, வளர்ந்த நாடாக மாற வேண்டிய அவசியமில்லை. பிரிக்ஸ் & ஜி 20 நாடுகளிலும், இந்தியா மிகவும் ஏழ்மையாகவே உள்ளது. வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்த வேண்டும்” என்றார்.
Similar News
News January 16, 2026
ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் பகீர் மோசடி!

இந்திய ரயில்வேயில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக வழங்கப்பட்ட தங்க முலாம் பூசிய வெள்ளி நாணயத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி நடந்துள்ளது. உண்மையில் அவை செம்பினால் செய்யப்பட்ட போலி நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக Ex. ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில், FIR பதியப்பட்டுள்ளது. சுமார் ₹2,000 மதிப்புள்ள நாணயத்தில், வெறும் 0.23% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
News January 16, 2026
சற்றுமுன்: SBI சேவைக் கட்டணம் உயர்ந்தது

சமீபத்தில் ATM கட்டணங்களை SBI உயர்த்திய நிலையில், IMPS சேவைகளுக்கான கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இலவசமாக இருந்த ₹25,000 – ₹1 லட்சம் வரையிலான IMPS பணப் பரிமாற்றத்திற்கு இனி ₹2 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும். ₹1 லட்சம் – ₹2 லட்சம் வரை ₹6 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மல்டிபிள் சம்பளம் & சிறப்பு கணக்கு வகைகளுக்கு முற்றிலும் இலவசம். இந்த நடைமுறை பிப்.15 முதல் அமலுக்கு வருகிறது.
News January 16, 2026
உலக சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை!

தோஹாவில் நடந்துவரும் உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, U19 உலக சாம்பியனான சீனாவின் கின் யுஷுவானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளார். விறுவிறுப்பான இந்த Round 64 சுற்றில் முதலில் பின் தங்கிய இறுதியில் அதிரடியாக ராக்கெட்டை சுழற்றி மணிகா 3-2 என்ற கணக்கில் அபாரமாக வென்றார். இதையடுத்து தனது அடுத்த சுற்றில் தென்
கொரியாவின் லீ யூன்ஹேவை சந்திக்க உள்ளார்.


