News April 6, 2024
அண்டை நாடுகளை இந்தியா ஆக்கிரமிக்காது

இந்தியா தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ, ஆக்கிரமிக்கவோ செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியா ஆரம்பம் முதல் ஒரே கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில் இந்தியா தனக்கு எதிரான செயல்களை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 19, 2026
திங்கள்கிழமை.. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்

மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் பிப்.23 – 28-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வு காலை 9-11 மணி வரை; பிற்பகல் 2-4 மணி வரையிலும் இருவேளைகளாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியர்களையே Scribes-ஆக நியமனம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
News February 19, 2026
விஜய் நிகழ்ச்சி.. ரூல்ஸ் போட்ட தவெக

வேலூர் அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள விஜய் நிகழ்ச்சியில 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியானது மக்கள் சந்திப்பு அல்ல; நிர்வாகிகள் சந்திப்பு என்றும், QR கோடு பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 19, 2026
குழந்தைகளுக்கு எருமைப்பால் கொடுப்பது கெட்டதா?

குழந்தையில் குரல் வளம் மேம்படும் என்ற நம்பிக்கையில் சிலர் எருமைப்பால் கொடுப்பர். ஆனால், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே எருமைப்பால் கொடுப்பது பாதுகாப்பானது. இதில் கொழுப்பு & புரதம் அதிகமாக இருப்பதால், தண்ணீர் கலந்து (அ) அளவாக கொடுப்பதே சிறந்தது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எருமைப்பால், பசும்பால் தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


