News April 28, 2025

இந்தியா vs பாக்.. உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீனா

image

இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 7, 2025

தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவது அவசியம்: வந்தது எச்சரிக்கை

image

காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பரவுகின்றனவா என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓரிடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 6 வயது முதல் பெரியவர்கள் வரை ப்ளூ தடுப்பூசி செலுத்துவது நல்லது. பொது இடங்களுக்கு செல்லும்போது முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.

News December 7, 2025

அன்புமணி பாமக தலைவர் இல்லையா? ராமதாஸ் தரப்பு

image

அன்புமணியை தலைவர் என அறிவித்து ECI அனுப்பிய கடிதங்கள் செல்லாது என நீதிமன்றம் கூறிவிட்டதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவே அனுமானிக்க வேண்டும். இதனால் தற்போது, பாமகவுக்கு தலைவர் யாரும் இல்லாததால், நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் தலைவராகலாம் என்றும், ராமதாஸ் தலைவர் என்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று எனவும் கூறியுள்ளார்.

News December 7, 2025

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, மாவட்டத்தின் முக்கியமான கோயில் திருவிழா என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!