News April 28, 2025

இந்தியா vs பாக்.. உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீனா

image

இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 28, 2025

இவர் தான் பல்துறை அமைச்சரோ!

image

திமுக ஆட்சி வந்தவுடன், போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜகண்ணப்பன், 2022-ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டு, பின் கூடுதலாக காதி துறையும் ஒதுக்கப்பட்டது. 2023-ல் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, உயர்கல்வி துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 2024-ல் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் வனம், காதி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News April 28, 2025

எந்த பாட்டில் முதலில் நிரம்பும்?

image

நிறைய நியூஸ் படிச்சி கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுறீங்களா..? வாங்க ஒரு சின்ன கேம் ஆடுவோம். மேலே உள்ள படத்தில், ஒரு குழாயில் இணைக்கப்பட்ட 7 பாட்டில்களை காணலாம். அதை கவனமாகப் பார்த்து, முதலில் எந்த பாட்டில் நிரம்பும் என சொல்லுங்கள். கொஞ்சம் லாஜிக்குடன் யோசித்தால், உங்களுக்கு பதில் கிடைக்கும். உங்க ஃப்ரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணி கேட்டுப்பாருங்க!

News April 28, 2025

PTR-க்கு கூடுதல் இலாகா ஒதுக்காதது ஏன்?

image

அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!