News April 28, 2025
இந்தியா vs பாக்.. உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீனா

இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
அதி கனமழை எனக் கணக்கிடுவது எப்படி?

வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், மழைப்பதிவு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். *24 மணி நேரத்தில் 21 செ.மீ-க்கு மேல் மழை பதிவானால் அது, அதி கனமழை. *12 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை பெய்தால் மிக கனமழை. *7 செ.மீ., முதல் 11 செ.மீ., வரை பெய்தால் கனமழை. *2 செ.மீ., முதல் 6 செ.மீ., வரை பெய்தால் மிதமான மழை என வானிலை ஆய்வு மையம் கணக்கிடுகிறது.
News October 22, 2025
கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்நிலையில், மாநில கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினரை வேகமாக செயல்படவும் உதயநிதி அறிவுறுத்தினார்.
News October 22, 2025
இஸ்லாமின் அரசியல் கவனிக்கப்படவில்லை: யோகி

இந்தியாவில் சனாதன தர்மத்தை அழிக்க (அ) மட்டுப்படுத்த இஸ்லாம் நினைத்தது என்று உ.பி., CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கு எதிராகவே சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பேரரசர்கள் போராடி சனாதன தர்மத்தை நிலைநிறுத்தினர் என்றார். ஆனால், பிரிட்டிஷ் காலனித்துவம் பற்றிய வரலாற்றை படிக்கும் நாம், இஸ்லாமின் இதுபோன்ற அரசியலையும் அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.