News October 21, 2024

2030க்குள் 3ஆவது பெரிய நாடு இந்தியா: ஜெய்சங்கர்

image

2030க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் TV நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பம், AI மற்றும் செமிகண்டக்டரின் வளர்ச்சியை பார்க்கும்போது, இந்தியாவின் திறன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றார். மேலும், மக்கள்தொகை, திறன் ஆகியவை இந்தியாவில் அதிகம் என்பதால், யார் முன்னேறுகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியம் எனக் கூறினார்.

Similar News

News July 6, 2025

தமிழக அரசில் 2,299 காலியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.4. திறனறிவு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை நேரடியாக பெறலாம். Share it!

News July 6, 2025

முடிவுக்கு வருகிறதா பாமக பிரச்னை?

image

ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஜூலை 8-ல் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதனால், தந்தை – மகன் இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வரவிருப்பதாக பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.

News July 6, 2025

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

image

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், க்யூ ஆர் கோடு, குழும முகவரி இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பகுதியின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளது போன்று தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!