News April 24, 2025
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது இந்தியா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், சிந்து, செனாப், ஜீலம் நதிகளின் நீரைப் பயன்படுத்தும் வாய்ப்பை பாக்., பெற்றது. விவசாயம் உள்பட அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆறுகளை பாக்., நம்பியுள்ளது. இந்நிலையில், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா செக் வைத்துள்ளதால், பாக்.கின் பல பகுதிகள் பாலைவனங்களாக மாற வாய்ப்புள்ளது.
Similar News
News January 4, 2026
உங்கள் உடலில் சிறிய எலும்பு எது தெரியுமா?

★வளர்ந்த மனிதரின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன ★10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பு செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன ★பாதங்களில் 26, கைகளில் (மணிக்கட்டுகள் உள்பட) 54 எலும்புகள் உள்ளன ★மிக நீளமான, மிக வலுவான எலும்பு தொடை எலும்பு (femur) ★உடலின் மிகச்சிறிய எலும்பு, காதில் உள்ள ‘ஸ்டேப்ஸ்’ எலும்பு ★மற்றொரு எலும்புடன் தொடர்பில்லாத ஒரே எலும்பு நாக்கின் அடியில் காணப்படும் V வடிவ hyoid எலும்பு.
News January 4, 2026
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன கிடைக்கும்?

பொங்கல் பரிசில் ₹3,000 ரொக்க பணத்தோடு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, வேட்டி & சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளன. இவை அனைத்தும் பொங்கலுக்கு முன்பாக நியாயவிலை கடைகள் வழியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளது. இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று நீங்கள் பெற்றலாம்.
News January 4, 2026
இவர்களுக்கு பொங்கல் பணம் ₹3,000 கிடைக்காது

தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஒருவேளை பொங்கலுக்கு முன் அவர்களின் ரேஷன் கார்டுகள் Activate ஆகவில்லை என்றால், லட்சக்கணக்கானோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் ரொக்கப்பணம் ₹3,000 கிடைக்காது என கூறப்படுகிறது.


