News April 24, 2025

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது இந்தியா

image

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், சிந்து, செனாப், ஜீலம் நதிகளின் நீரைப் பயன்படுத்தும் வாய்ப்பை பாக்., பெற்றது. விவசாயம் உள்பட அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆறுகளை பாக்., நம்பியுள்ளது. இந்நிலையில், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா செக் வைத்துள்ளதால், பாக்.கின் பல பகுதிகள் பாலைவனங்களாக மாற வாய்ப்புள்ளது.

Similar News

News November 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 534 ▶குறள்: அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. ▶பொருள்: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

News November 29, 2025

அப்போ ட்ரோல், இப்போ பாராட்டு: லிங்குசாமி

image

சூர்யாவின் ‘அஞ்சான்’ நேற்று ரீரிலீஸானது. இந்நிலையில், இப்படம் முதலில் ரிலீஸானபோது பலரும் ட்ரோல் செய்ததாக அதன் இயக்குநர் லிங்குசாமி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், இந்த படத்தையா ட்ரோல் செய்தார்கள் என தற்போது பலர் தன்னிடம் கூறியதாக நெகிழ்ந்துள்ளார். மேலும், தான் இயக்கிய மேலும் சில படங்களை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் எந்த படத்தை ரீரிலீஸ் செய்யலாம்?

News November 29, 2025

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!