News August 9, 2025
AI பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடம்: சாம்

OpenAI-ன் நவீன AI மாடலான GPT-5 அறிமுகமாகியுள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன், அமெரிக்காவிற்கு பிறகு இந்தியாவில் தான் தங்களது AI மாடலை அதிகம் பயன்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ChatGPT-ஐ இன்னும் மலிவான விலைக்கு கொடுக்க முயற்சிப்பதாகவும், இதற்காக உள்நாட்டு பங்குதாரர்களுடன் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
திமுக உறுப்பினர் சேர்க்கை நீட்டிப்பு? 13ல் ஸ்டாலின் முடிவு

ஆக.13-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இதில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது OTP பெறக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 13-ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
News August 9, 2025
கழிவறையில் செல்போன் யூஸ் செய்வதால் மூலநோய் வரலாம்!

டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கழிவறையில் நீண்டநேரம் அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள் ஏற்படுமாம். அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால், ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதோடு ரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். ஜாக்கிரதை..! SHARE IT.
News August 9, 2025
டிப்ளமோ தேர்வுகளில் புது மாற்றம்

டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டீன்ஸ் (MCQ) முறையில் நடத்த, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபரில் நடக்க உள்ள தேர்வுகளில், ஒரு கேள்விக்கு பல பதில்கள் வழங்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் கேள்வித்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள், குறுகிய பதில்கள் அளிக்கும்படி சில கேள்விகள் இடம்பெறும்.