News April 24, 2025

இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன!

image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இருநாடுகளும் எல்லைகளில் படைகளை குவித்தும், ஏவுகணைகளை சோதனை செய்தும் வருகின்றன. சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை ரத்து செய்துள்ளன. மறுபுறம், குடியரசுத் தலைவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்.-ஐ எப்படி பழிவாங்குவது என்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Similar News

News April 24, 2025

கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகர் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

News April 24, 2025

காஷ்மீர் இளைஞர் மரணம்.. தந்தை பெருமை!

image

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகளை காக்க முயன்ற உள்ளூர்வாசி <<16192997>>சையது<<>> சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், தனது மகன் உயிரை தியாகம் செய்ததால்தான் தான் தற்போது உயிரோடு இருப்பதாக அவரது தந்தை ஹைதர் ஷா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மகனின் சடலத்தை பார்த்ததும் தானும் இறந்து போயிருப்பேன் எனவும், ஒரு சிலரை காப்பாற்றிய தனது மகனின் வீரம் குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 24, 2025

நாளை வானம் ‘SMILE’ பண்ணும்!

image

மகிழ்ச்சியின் அடையாளமான சிரித்த முகத்துடன் நாளை வானம் தோன்றும். நாளை அதிகாலை 5.30 மணிக்கு வியாழனும், சனியும் நிலவுக்கு அருகில் வருவதால் இந்த நிகழ்வு நடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இரு கோள்களும் இரு கண்கள் போல் காட்சி தர பிறை நிலா சிரித்தவாறு இருக்கும். 1 மணி நேரம் நீடிக்கும் இந்நிகழ்வை முன் வெறும் கண்களாலே பார்க்கலாம் என்றாலும், டெலஸ்கோப், பைனாகுலர்களில் பார்த்தால் இன்னும் தெளிவாக தெரியும்.

error: Content is protected !!