News April 24, 2025
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி.. அலறும் பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தியது. ஐஎன்எஸ் சூரத் (Destroyer) கப்பல் மூலம் கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கொடூர தாக்குதல் மூலம் இந்தியாவை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் மெசேஜ். இதனால், எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 24, 2025
ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
News April 24, 2025
இந்தியா vs பாக். யார் வலிமை?

இந்தியா- பாக். இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், இருநாட்டு ராணுவ வலிமையை தெரிந்து கொள்ளலாம். *ராணுவ வீரர்கள்: 14,55,550 (இந்தியா), 6,54,000 (பாக்.) *அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்: 293 (இந்தியா), 121 (பாக்.) *போர் விமானங்கள்: 2,229 (இந்தியா), 1,399 (பாக்.) *துணை ராணுவப்படை வீரர்கள்: 25,27,000 (இந்தியா), 5,00,000 (பாக்.) *உலகில் வலிமையான ராணுவம்: இந்தியா 4-வது இடம், பாக். 12-வது இடம்.
News April 24, 2025
காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: அம்பானி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ஹாஸ்பிடலில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அம்பானி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ரிலையன்ஸ் குடும்பம் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.