News March 9, 2025

5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா…!

image

CT ஃபைனலில் 252 ரன்கள் இலக்கை எட்ட இந்திய அணி போராடி வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 76 ரன்னில் அவுட் ஆக, நிதானமாக விளையாடி ஸ்ரேயஸ் ஐயர் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2 ரன்னில் அரை சதத்தை நழுவ விட்ட அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தபோது, சான்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து, அக்சர் படேலும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Similar News

News July 8, 2025

திமுக 200+ தொகுதிகளில் வெல்ல வாய்ப்பில்லை: இபிஎஸ்

image

200+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் 2வது நாளாக பரப்புரை மேற்கொண்ட அவர், தாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவிற்கு என்னவென்று கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியை மட்டுமே நம்பி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுக மக்களை நம்பி இருப்பதாகத் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் பிரச்னை இல்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

News July 8, 2025

அஜித் குமார் மரணம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்குடன் நிகிதாவின் நகை காணாமல்போன வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அஜித் குமார் கொலை வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ம் தேதிக்குள் முடித்து இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 8, 2025

மலையாள நடிகர் சௌபின் சாகிர் கைது

image

பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சௌபின் சாகிர், அவரது தந்தை உட்பட 3 பேரும் ஏற்கெனவே முன்ஜாமின் வாங்கி இருந்த நிலையில் விசாரணைக்கு பின் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!