News August 10, 2025
இந்தியாவிற்கு வான்வெளியை மூடியதால் ₹127 கோடி இழப்பு

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.
Similar News
News August 10, 2025
மீண்டும் அப்பாவான டென்னிஸ் லெஜெண்ட்

டென்னிஸ் லெஜண்ட் ரஃபேல் நடால் மீண்டும் தந்தையாகியுள்ளார். அவரது மனைவி மரியா ஃபிரான்ஸிஸ்கா பெரெல்லோவிற்கு கடந்த 7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு Miquel என பெயர் வைத்துள்ளனர். இது மரியாவின் காலமான தந்தையின் பெயராகும். அவரது நினைவாக குழந்தைக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற நடாலுக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
News August 10, 2025
ஊழியர்களை பில்லியனர்கள் ஆக்கினேன்: Nvidia CEO

தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 42,000 ஊழியர்களின் சம்பளம், Comp. Off என அனைத்தையும் மதிப்பாய்வு செய்வதாக Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதமும் இதற்கென தனியாக நேரம் ஒதுக்குவதாகவும், வேறு எந்த நிறுவனத்தை விடவும் தனது நிர்வாக குழு ஊழியர்களை அதிகளவில் பில்லியனர்கள் ஆக்கியது நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி, இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.