News October 23, 2024
4ஆவது அரக்கனை கடலில் இறக்கியது இந்தியா

4ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா கடலில் இறக்கியுள்ளது. எஸ்.4 எனப்படும் அந்த நீர்மூழ்கி, பாலிஸ்டிக் ஏவுகணையை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. ஏற்கெனவே இந்தியா 3 அணுசக்தி நீர்மூழ்கிகளை பயன்பாட்டுக்கு காெண்டு வந்துள்ளது. அதில் முதல் 2 நீர்மூழ்கி கப்பல்கள் பணியில் உள்ளன. 3ஆவது நீர்மூழ்கி தற்போது பரிசோதனையில் உள்ளது. விரைவில் அதுவும் பணியில் ஈடுபடுத்தப்படும்.
Similar News
News July 7, 2025
இபிஎஸ் சுற்றுப்பயணம்.. போட்டோ எடுக்க தடை!

2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த பயணத்தின்போது, இபிஎஸ் உடன் புகைப்படம் எடுப்பவர்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரையும் அவருடன் போட்டோ எடுக்க விட வேண்டாம் என உத்தரவு பறந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தவிர்க்க அதிமுக இந்த புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.
News July 7, 2025
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விஜய்..!

விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தகர்த்துள்ளார்.இது ஒருபுறமிருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். தவெகவுக்கு தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் உள்ளன.
News July 7, 2025
வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

‘வேலுண்டு வினையில்லை’ என்பதிலேயே இதற்கான விடை தெரிந்துவிடும். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் திருநீறு பூசப்பட்டு, அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேலும் வைக்கப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட முருகனின் ஆயுதமான வேலினை வீட்டில் வைத்து வழிபட்டால் கர்ம வினைகள் அகற்றப்படும். வேலுக்கே உரிய மூலமந்திரத்தை நா மணக்க மணக்க கூற வாழ்வை செழிப்புறச் செய்வான் வேலாயுத நாயகன்.