News November 23, 2024
இந்தியாவே உற்றுப் பார்க்கும் பிரியங்கா காந்தி!

வயநாடு எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மகுடம் சூடுவாரா என்பது சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ரிசைன் செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை பிரியங்கா களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.
Similar News
News November 2, 2025
பிரபல நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

புகழ்பெற்ற நடிகர் டெக்கி கார்யோ(72) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் ரோலில் நடித்து உலகளவில் பிரபலமான இவர், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட், பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரான்ஸில் வசித்துவந்த இவரின் கடைசி காலத்தை, புற்றுநோய் கொடுமையாக்கியது. இறுதிவரை போராடியும் மீள முடியவில்லை. அவரது மறைவுக்கு கண்ணீருடன் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 2, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 வரை சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✱காலியிடங்கள் 161 ✱கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✱வயது: 18- 33 வரை ✱தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ✱முழு தகவலுக்கு <
News November 2, 2025
SIR-ஐ கண்டு திமுக ஏன் அஞ்சுகிறது? TTV தினகரன்

SIR-ல் என்ன தவறு நடந்து விடப்போகிறது என திமுக அஞ்சுகிறது என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, எப்படி தில்லுமுல்லு செய்ய முடியும் எனவும், கொடநாடு விவகாரத்தில் EPS-ஐ திண்டுக்கல் சீனிவாசன் கோர்த்துவிடப் பார்க்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொடநாடு விவகாரத்தில் <<18173992>>EPS அக்யூஸ்ட்<<>> என்றால் ஜெயிலில் போட வேண்டியதுதானே என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார்.


