News March 26, 2025

மெகுல் சோக்‌ஷியை நாடு கடத்த இந்தியா முயற்சி!

image

பஞ்சாப் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி, பெல்ஜியத்தில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பெல்ஜியம் அரசுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அவரது உறவினரான நிரவ் மோடியும் விரைவில் லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.

Similar News

News March 26, 2025

கண்ணீர் மழையில் மனோஜ் உடல் தகனம்!

image

மாரடைப்பால் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் (48) உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு தந்தை பாரதிராஜா, மகள்கள் ஆகியோர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்தனர். பாக்யராஜ், சீமான், வைரமுத்து உள்ளிட்டோர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். பல கதாபாத்திரங்கள் மூலமாக நம் மனதில் இடம்பிடித்த மனோஜ், இறுதியாக காற்றோடு காற்றாக கலந்துவிட்டார். REST IN PEACE MANOJ.

News March 26, 2025

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிக் கனியை பறிக்குமா?

image

EPS – அமித் ஷா சந்திப்பு, அதிமுக – பாஜக கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது. ஒருவேளை, இக்கூட்டணி அமைந்தால், இவர்களுக்கு வாக்கு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், திமுக கூட்டணி பலமாக இருப்பதால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்தக் கூட்டணி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News March 26, 2025

10 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

அடுத்த 2 மணி நேரத்தில் (7 மணி வரை) தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!