News March 26, 2025
மெகுல் சோக்ஷியை நாடு கடத்த இந்தியா முயற்சி!

பஞ்சாப் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்ஷி, பெல்ஜியத்தில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பெல்ஜியம் அரசுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அவரது உறவினரான நிரவ் மோடியும் விரைவில் லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
Similar News
News July 11, 2025
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
News July 11, 2025
லோகேஷ் மீது கோபம்: சஞ்சய் தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். ‘கேடி: தி டெவில்’ பட விழாவில் ஜாலியாக பேசிய அவர் லியோ படத்தில் தனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை எனவும் தன் திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
News July 11, 2025
மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.