News April 8, 2024

உலகின் புற்றுநோய் தலைநகர் இந்தியா

image

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோயாலும், மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 10இல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், இந்தியாவை ‘உலகின் புற்றுநோய் தலைநகர்’ என அழைக்கலாம் என்கின்றனர்.

Similar News

News November 5, 2025

ஆரியத்தின் முன்பு மண்டியிட்ட திராவிடம்: சீமான்

image

தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை; திராவிட கருத்தியலுக்கும் தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் போட்டி என்று சீமான் தெரிவித்துள்ளார். பார்ப்பனப் பெண்ணான ஜெ.,வின் தலைமையை திராவிடத் தலைவர்கள் எப்படி ஏற்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், ஆரியத்தின் முன்பு திராவிடம் மண்டியிட்டது என விமர்சித்துள்ளார். மண்டியிட்டால் கூட பரவாயில்லை; குப்புறவிழுந்து கும்பிட்டது என கடுமையாக சாடினார்.

News November 5, 2025

அட்லீ vs லோகி vs நெல்சன்.. யார் கரெக்ட் சாய்ஸ்?

image

தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவின் அடுத்த மெகா ப்ராஜெக்ட் என்றால் அது ரஜினி- கமல் இணையும் படம்தான். ‘விக்ரம்’ படத்தின் மூலம் தனக்கு பெரிய கம்பேக் கொடுத்த லோகேஷை கொண்டுவர கமல் முயற்சித்தாலும், ரஜினியின் சாய்ஸ் லோகேஷ் இல்லை. நெல்சன் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரஜினியின் தேர்வாக அட்லீ மாறியிருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அட்லீ, லோகேஷ், நெல்சன்- மூவரில் யார் பெஸ்ட் சாய்ஸ்?

News November 5, 2025

கையெடுத்து கும்பிட்டு, Fine போட்ட போலீஸ்!

image

உ.பி.யில் பின்னால் 4 பேர், முன்னால் 2 பேர் என 6 பசங்களுடன் பைக்கில் வந்தவரை பார்த்து போலீசும் ஒரு கணம் அரண்டு போயினர். அவரை மடக்கிய போலீசார், அபராதம் போடுவதற்கு முன், கையெடுத்து கும்பிட்டனர். பல்வேறு விதிமீறலுக்காக அவருக்கு ₹7,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக, நெட்டிசன்களும் அவர் செயலால் வாயடைந்து போயுள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!